விசித்திர விஞ்ஞானம் நீ...


விஞ்ஞானத்தால்
மாற்றங்கள் நிகழ்வதுண்டு...
ஆனால்
எனக்குள்
மாற்றங்கள் நிகழ்த்தும்
விசித்திரமான
விஞ்ஞானமே நீ தான்!

வானொலியும்
தொலைக்காட்சியும்
இயங்குவது
மின்காந்த அலையால்...
வாலிபன் நான் மயங்கியது
உன் காந்தவிழியால்!

புவியின் ஈர்ப்பாலேயே
பொருட்கள் விழுகிறதாம்...
நான்
உன் புன்னகையின்
ஈர்ப்பாலல்லவா
காதலில் வீழ்ந்தேன்!

வலைப்பின்னலில்
உலகமே
சிக்கிக் கிடக்க...
உன்
ஜடைப்பின்னலில்
சிக்கிக் கொண்டவர்கள்
நானும் பூக்களும் தான்!

பூமியில்...
ஒரு பங்கு தரை
மூன்று பங்கு நீர்!
தண்ணீரில்...
இருபங்கு ஹைட்ரஜன்
ஒரு பங்கு ஆக்ஸிஜன்...
காற்றில்...
நைட்ரஜனும்
ஆக்ஸிஜனுமே
பெரும்பங்கு!

என்னவளே!
எட்டிப்பார்
என் இதயத்தை...
நீதான்
அங்கு முழுப்பங்கு!

நிலவில்...
காற்றில்லை
என்
நினைவில்
நீ இல்லாமல் இல்லை!

தனித்தனியாய்
பிரிக்கக் கூடியதுதான்
கலவை...
பிரியமானவளே!
நீயும் நானும்
பிரிக்கவே முடியாத
சேர்மமாக
சேர்ந்துவிடக் கூடாதா
என்பதே
என் கவலை!

பூமி கூட
தன்னைத்தானே
சுற்றிக் கொண்டு
சூரியனையும் சுற்றுகிறதடி...
ஆனால்
நான்
உன்னைத்தானே
சுற்றுகிறேன்!

என் பூமியே
என்னைப் புறக்கணிக்காதே!
அப்புறம்
அதனால் ஏற்படும்
அதிர்வுகளை அளவிட
உன்னிடம்
அளவுகோல் இல்லை...


.........................................................படித்ததில் பிடித்தது

0 comments:

Post a Comment