மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் கடவுள் அளித்த உறவு அம்மா மட்டுமே. அது ஒன்றே நிரந்தரமானது. தாயின் ஸ்பரிசமும், அருகாமையும் தரும் பாதுகாப்பு உணர்வை வேறெங்கும், எந்த ஒரு தருணத்திலும் நாம் பெறுவதில்லை. தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உறவின் ஆழத்தை ஒருபோதும் நிரூபிக்க வேண்டியதில்லை. நினைவுபடுத்த வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், தந்தை, கணவன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைத்துமே மனிதர்கள், தங்கள் தேவைக்காக தாங்களே சிருஷ்டித்துக் கொண்டது. நிலையற்றது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்தும், தேவைகளின் பொருட்டும் மாறக் கூடியது.
வாழ்க்கையில் முதல் பாதியை பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்துவிட்ட கடவுள், பிற்பாதி வாழ்க்கையை நம் கையில் ஒப்படைத்துள்ளார். நமக்கான உறவுகள் மற்றும் உலகத்தை படைக்கும் அல்லது தேர்வு செய்யும் உரிமை நமக்கே உரித்தானது. ஒரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் அவனது முழு வாழ்க்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடமே இருக்கிறது.
0 comments:
Post a Comment