இன்றைய நிலையில் இலவசங்கள் தேவையில்லை என்று கூற முடியாது, இட ஒதுக்கீடு குறித்து கேள்வியே எழுப்ப முடியாது, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும் எல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே, அரசு இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறது என்று வாதிடலாம்.
ஆனால், அரசாங்கம் என்பது என்ன? அதன் தோற்றுவாய் எது? வரலாற்றில் பின்னோக்கிச் சென்று பார்த்தால், சமூகத்திற்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிர் வாழத் தேவையான வாழ்வாதாரங்களை கிடைக்கச் செய்யவுமே அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குழுத் தலைவனில் தொடங்கி, அரசன், சர்வாதிகாரி, மக்களாட்சி என்று அரசாங்கம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. நிர்வாக அமைப்பு எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் நோக்கமும், பணியும் முன்பு குறிப்பிட்ட இரண்டுமே.
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஒடுக்கப்பட்டார்கள் என்பது வரலாற்றுப் பிழை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இட ஒதுக்கீடு என்ற பெயரில் மற்றொரு பிரிவினருக்கு வாய்ப்புகளை மறுப்பது எந்த வகையில் நியாயம்? ஒரு பிழையை சரி செய்ய மற்றொரு பிழை எவ்வாறு சரியாக இருக்க முடியும்? கால்வாயில் பலமான ஒரு கரையை வெட்டி, சமப்படுத்துவதன் மூலம் பலவீனமான மறுகரையை பலப்படுத்தி யாருக்கு என்ன பயன்? கால்வாய் என்ற சமூகத்தை பலப்படுத்தும் நமது நோக்கம் ஈடேறுமா?
இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலருக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன. இனி வரும் காலங்களில் இட ஒதுக்கீடு தொடரும் போது, ஏற்கனவே அதனால் பலனடைந்தோரின் வழித் தோன்றல்களே மீண்டும், மீண்டும் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக மேல் நோக்கி எழுப்ப வேண்டிய அரசாங்கம், இதன் மூலம் தனது கடமையில் இருந்து தவறிவிடுகிறது. ஆனாலும், ஒரு சிலரை திருப்திப்படுத்தி காரியம் (வாக்கு) சாதித்துக் கொள்கிறது.
இதேபோன்ற நிலைதான், இலவசங்களை வழங்குவதிலும் காணப்படுகிறது. மிகச் சில மக்களை மட்டுமே சென்றடையும் இலவசங்கள், சமூகத்தில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக அரசாங்கம் பறைசாற்றிக் கொள்கிறது. அம்மா உணவகம், அம்மா திரையரங்கம் போன்றவை சமூகத்தில் ஒரு சதவிகிதம் பேரைச் சென்றடையுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. இதுபோன்ற திட்டங்களால் அந்தந்த சந்தைகளிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. அண்மைக்கால இலவசங்களில் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை இலவச டி.விக்களே. அரசியல், நிர்வாக தகிடுதத்தங்களை படிக்காத பாமரரும் தெரிந்து கொள்ள வழிவகுத்தவை டிவிக்கள்தானே.
இட ஒதுக்கீடும், இலவசங்களும் அரசாங்க நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடுகளே. ஒட்டுமொத்த சமூகத்தையும் காக்கும் பொறுப்பில் இருந்து தவறிவிட்ட அரசு, ஒரு சிலரை மட்டுமே திருப்திப்படுத்தி கடமையை முடித்துக் கொள்கிறது.
ஆனால், அரசாங்கம் என்பது என்ன? அதன் தோற்றுவாய் எது? வரலாற்றில் பின்னோக்கிச் சென்று பார்த்தால், சமூகத்திற்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிர் வாழத் தேவையான வாழ்வாதாரங்களை கிடைக்கச் செய்யவுமே அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குழுத் தலைவனில் தொடங்கி, அரசன், சர்வாதிகாரி, மக்களாட்சி என்று அரசாங்கம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. நிர்வாக அமைப்பு எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் நோக்கமும், பணியும் முன்பு குறிப்பிட்ட இரண்டுமே.
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஒடுக்கப்பட்டார்கள் என்பது வரலாற்றுப் பிழை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இட ஒதுக்கீடு என்ற பெயரில் மற்றொரு பிரிவினருக்கு வாய்ப்புகளை மறுப்பது எந்த வகையில் நியாயம்? ஒரு பிழையை சரி செய்ய மற்றொரு பிழை எவ்வாறு சரியாக இருக்க முடியும்? கால்வாயில் பலமான ஒரு கரையை வெட்டி, சமப்படுத்துவதன் மூலம் பலவீனமான மறுகரையை பலப்படுத்தி யாருக்கு என்ன பயன்? கால்வாய் என்ற சமூகத்தை பலப்படுத்தும் நமது நோக்கம் ஈடேறுமா?
இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலருக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன. இனி வரும் காலங்களில் இட ஒதுக்கீடு தொடரும் போது, ஏற்கனவே அதனால் பலனடைந்தோரின் வழித் தோன்றல்களே மீண்டும், மீண்டும் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக மேல் நோக்கி எழுப்ப வேண்டிய அரசாங்கம், இதன் மூலம் தனது கடமையில் இருந்து தவறிவிடுகிறது. ஆனாலும், ஒரு சிலரை திருப்திப்படுத்தி காரியம் (வாக்கு) சாதித்துக் கொள்கிறது.
இதேபோன்ற நிலைதான், இலவசங்களை வழங்குவதிலும் காணப்படுகிறது. மிகச் சில மக்களை மட்டுமே சென்றடையும் இலவசங்கள், சமூகத்தில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக அரசாங்கம் பறைசாற்றிக் கொள்கிறது. அம்மா உணவகம், அம்மா திரையரங்கம் போன்றவை சமூகத்தில் ஒரு சதவிகிதம் பேரைச் சென்றடையுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. இதுபோன்ற திட்டங்களால் அந்தந்த சந்தைகளிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. அண்மைக்கால இலவசங்களில் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை இலவச டி.விக்களே. அரசியல், நிர்வாக தகிடுதத்தங்களை படிக்காத பாமரரும் தெரிந்து கொள்ள வழிவகுத்தவை டிவிக்கள்தானே.
இட ஒதுக்கீடும், இலவசங்களும் அரசாங்க நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடுகளே. ஒட்டுமொத்த சமூகத்தையும் காக்கும் பொறுப்பில் இருந்து தவறிவிட்ட அரசு, ஒரு சிலரை மட்டுமே திருப்திப்படுத்தி கடமையை முடித்துக் கொள்கிறது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஆனால், இலவசமாக அல்ல. அவற்றைப் போராடிப் பெறும் அளவுக்கு அவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்ய வேண்டியது அரசின் கடமை. இதன் மூலம், அவர்களின் தன்மானம் காக்கப்படுவதோடு, சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பும் கணிசமாக கிடைக்கும். அரசாங்கம் என்ற சமூக நிர்வாக அமைப்பின் நோக்கமும், செல்லும் பாதையும் அதை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment