கடவுள் நம்பிக்கை அவசியமா?


ஆதி மனிதன் தனித்தனியாக ஆங்காங்கே சிதறி வாழ்ந்த போது நீதி, நேர்மை, உண்மை போன்ற எந்தவொரு ஒழுங்கு விதிகளும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அதற்கான அவசியமும் இருக்கவில்லை. ஆனால், படிப்படியாக குழுவாக, கூட்டமாக பின்னர் சமுதாயமாக மனிதர்கள் கூடி வாழ தலைப்பட்ட போதுதான் அமைதியையும், ஒழுங்கையும் பராமரிக்க நீதி, நேர்மை, உண்மை போன்ற ஒழுங்கு விதிகள் அவசியமாக பட்டன. பெண்களுக்கு கற்பு நெறி போதிக்கப்பட்டதும் இதன் தொடர்ச்சியே. 


சமூக வாழ்க்கையை நிலைப்படுத்தவும், நெறிப்படுத்தவும் மனிதர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க ஒரு உயர்ந்த சக்தி பீடம் தேவைப்பட்டது. அந்த உயர் சக்தி பீடமே பின்நாட்களில் கடவுள் என்றானது. உண்மையில், கடவுளுக்கு அடியார்களோ, பக்தர்களோ, தொண்டர்களோ தேவையில்லை. ஆனால், சமூகத்தை நெறிப்படுத்தவும், மனிதர்களை பண்படுத்தவும் சமூகத்திற்கு கடவுள் என்ற கற்பிதம் அவசியம் தேவை. பக்குவப்படாத, பண்படாத மனிதர்களுக்கு கடவுளை மனதில் இருத்த கடவுளுக்கு ஒரு வரி வடிவமும் கொடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment